Monday, June 30, 2008

பழம் பாடல் கம்பன்

மது உண்ண நிறைந்து நிற்கும் மங்கையர் கூந்தல் தோறும்
மலர்களில் மொய்க்கும் வண்டின் மாபெரும் கூட்டம் அங்கே
தருவதில் விருப்பம் இல்லார் தனைச் சூழும் இரப்பார் போல
விறு விறு என்று சுற்றி விண் வரை நிறைந்து நிற்க
மது உண்ண தாமரைச் செவ்வாயினைத் திறந்தால் வண்டு
அது உள்ளே நுழையும் என்று அஞ்சிய பெண்ணாள் வாயில்
கழுநீர்ப் பூத்தண்டைக் கொண்டு மதுவினை உறிஞ்சினாளாம்
கனித் தமிழ் நாடு கண்ட இயற்கையின் குழலைக் கண்டோம்

கம்பன்

வான் தனைப் பிரிதல் ஆற்றா
வண்டு இனம் வச்சை மாக்கள்
ஏன்ற மாநிதியம் வேட்ட
இரவலர் என்ன ஆர்ப்ப
தேன் தரு கமலச்செவ்வாய்
திறந்தனள் நுகர நாணி
ஊன்றிய கழுநீர் நாளத்
தாளினால் ஒருத்தி உண்டாள்

0 மறுமொழிகள்: