Sunday, June 22, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

கண் நிறைந்த ஆணழகன் தன்னை அந்தக்
கனி மொழியாள் கண்டு விட்டாள் வேறு என்ன
தன்னுணர்வு எல்லாமே அவனே யாகி
தனியாகித் தனக்குத் தான் பேசுகின்றாள்
கன்னியவள் இடை சிறியதென்று காட்டக்
கனத்திருக்கும் மார்பகங்கள் துன்பம் கொள்ள
அன்னவனை நினைத்தங்கு ஏங்கி நின்றாள்
அவன் மீது குற்றம் ஒன்றை ஏற்றுகின்றாள்



பொன்னானை மனம் கொண்டு மகிழும் பெண்ணாள்
பொறுப்பாகக் கேட்கின்றாள் இனிய கேள்வி
கண்ணானான் மனத்திற்குள் பெண்ணாள் போக
கடுந்தடையை விதித்துள்ள அந்தக் கள்ளன்
பெண்ணாளின் நெஞ்சுக்குள் மீண்டும் மீண்டும்
பேரலையாய்ப் புகுவானாம் நாணம் இன்றிக்
கண்வாளாய்க் கொண்ட மகள் கேட்டு நின்றாள்
காமத்துப் பால் தரும் அழகுக் காட்சியிது

குறள்
தம் நெஞ்சத்து எம்மைக் கடி கொண்டார் நாணார் கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

0 மறுமொழிகள்: