Monday, June 30, 2008

அந்தோ பாவம்

வாழ் நாளை வீணாளாய் ஆக்குதற்காய்
வடிவெடுத்தாற் போல சிலர் என்றும் எங்கும்
சூழ்ந்திருக்கும் நன்மைகளை விட்டு விட்டு
சுத்தமாகத் தீமைகளைத் தேடித் தேடி
ஆழ்ந்து அதால் அனைவருக்கும் துன்பம் தர
ஆசை கொண்டு ஆடுகின்றார் அறிய மாட்டார்
தூர்ந்து அந்தத் துன்பமெல்லாம் அவரையன்றோ
துடைத்தெறியும் அழித்தொழிக்கும் அநதோ பாவம்

1 மறுமொழிகள்:

said...

என்ன செய்யலாம் ஐயா! பரிதாபப்பட மட்டுமே முடியும்.