Tuesday, July 1, 2008

பழம் பாடல் கம்பன்

ஆடினார் நீரில் அவர் ஆடிய ஆட்டம் தன்னால்
மூடிய மார்பை விட்டு சந்தனம் கரைந்து போக
கூடிய நேரம் அந்தக் குவி முலைக் கூட்டம் தன்னில்
கொண்டவர் வைத்து நின்ற நகக் குறி வெளியில் தோன்ற
வேள்வியின் பொன்னாலான கலசங்கள் நூல் கொண்டாற் போல்
வெறி நகக் குறிகள் தோன்ற காதலர் எரிகின்றாராம்
வேள்வியாய்க் காமம் தானும் விளைவதே நன்று என்று
ஆழ் மன எண்ணம் தன்னை அழகுறக் கம்பன் தந்தான்

கம்பன்

எரிந்த சிந்தையர., எத்தனை என்கெனோ
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்
தெரிந்த கொங்கைகள்,செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே

0 மறுமொழிகள்: