Sunday, July 13, 2008

பழம் பாடல் நாலடியார்

        செந்தாமரை மலரில் சீராக வீற்றிருக்கும்

             செங்கண் மால் மார்பு   உறையும் திருமகளே  சரிதானோ

      நொந்தழிய வைக்கின்றாய்  நூலறிந்த மேலவரை

            நோயாக வந்தவர்க்கு செல்வமதைக் குவிக்கின்றாய்

     செந்திருவே நீ நிலத்தில்  சாம்பலாய்   ஒழிந்திடுக

            சீரான பண்பாளர் பொன் போன்றார்  அவர்  தவிர்த்து

    மைந்தராய் தீமைகளை மனம்  கொண்டு வாழ்வாரின்

           மணமில்லா  மலர் போன்றார்  தன்னிடத்துச் சேர்ந்தாயே

                           

          

                                      நாலடியார்

          நாறாத்தகடே போல்  நன்மலர் மேல் பொற்  பாவாய்

         நீறாய்   நிலத்து விளியரோ      -      வேறாய

        புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ  பொன் போலும்

       நன்மக்கள் பக்கம் துறந்து

0 மறுமொழிகள்: