Thursday, July 31, 2008

அசிங்கம்

பெண்களையே மீண்டும் மீண்டும் பேசுகின்றார்
  பேசுவதில் நாணமின்றிப் பேசுகின்றார்
  கண்கள் அவர் என்பதையே மறந்து இங்கே
  கண்ணியமே இல்லாராய்ப் பேசுகின்றார்
  என்ன செய்ய இவர்களையே என்ன செய்ய
  இவர் தாயர் பெண்ணென்றல் மறந்தே நின்றார்
  கன்னலென்னும் பெண்ணினத்தை இழித்துப் பேசும்
  கயவர்களைச் சமுதாயம் தூத்தூ என்னும்

 காதலிக்கப் பெண் வேண்டும் அவர்க்ளோடு
  கலந்து பல இன்பங்கள் பெறவும் வேண்டும்
 பா பலவாய்ப் படைப்பதற்கு அவர்கள் வேண்டும்
  பனிக் குளிராய் அனற் சூடாய்ச்சுகங்கள் வேண்டும்
 கூடுகையில் உளறுகின்ற மொழிகள் எல்லாம்
  கொண்டவளை ஏமாற்றிச் சரித்தல் வேண்டும்
 ஆடுகின்றார் ஆடவரில் சில பேர் இங்கே
  அவர் இருத்தல் ஆடவர்க்கே அசிங்கம் இங்கே

2 மறுமொழிகள்:

said...

அய்யா ...அசத்தல்..!

ஆமாம்..நீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை!

said...

en kavithai onru en padhivilirunhdhu
வேண்டவே வேண்டாம்

ஈன்று எடுத்து
வாரிசு உருவாக்க
அவள் வேண்டும்
நாளும் பேணிப்
பாதுகாக்க
அவள் வேண்டும்
அறுசுவை சமைத்து
நாவிற்கு அளித்திட
அவள் வேண்டும்
இரவு கட்டிலில்
இன்பம் அளித்திட
அவள் வேண்டும்
நோயுற்ற நேரத்தில்
நலமாய் காத்திட
அவள் வேண்டும்
கருவில் அவளா ?
கருக்கிடு அவளை
வேண்டாம் அவள்
வேண்டவே வேண்டாம்