Sunday, July 27, 2008

குறட் கருத்து பொருட் பால்

 ஊர் தூற்றிச் சிரிக்கின்ற ஒரு செயலை
  ஒரு நாளும் செய்து விடார் நாணம் கொண்டார்
  பேர் கெட்டுச் சீர் கெட்டுப் போனால் கூட
  பிழையுள்ளார் வாழ்வது போல் வாழ மாட்டார்
  ஆர் கெட்டுப் போனாலும் நாணம் உள்ளார்
  அவர் சிறப்பு பெருஞ் சிறப்பு நாணம் காக்க
  பேர் பெற்றார் தம் உயிரைத் தந்திடுவார்
  பெரிதங்கு நாணம் என்றே உணர்த்திடுவார்

  குறள்
 நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப் பொருட்டால்
 நாண் துறவார் நாண் ஆள்பவர்

0 மறுமொழிகள்: