Monday, July 21, 2008

பழம் பாடல் திரிகடுகம்

    உணவளிப்பார் யார் என்று அறிந்த பின்னர்

           உணவுண்பார் நல்லவராம் அறிஞர் என்றும்

   தனைப் பெரிதாய் எண்ணுகின்ற சிறியோரிடம்

         தனை விற்றுப் பிழைக்கின்ற தாசியிடம்

   வினை நல்லதாற்றுகின்ற  அறச் சாலைகள் த்ம்மை

        வேரொடு மகிழ்ந்தழித்த ஈனரிடம்

  தனை அறிந்த நல்லவர்கள் ஒரு காலமும்

       தான் அருந்த மாட்டாராம் அவர் உணவை

                               திரிகடுகம்

   செருக்கினால் வாழும் சிறியவனும் பைத்தகன்ற

  அல்குல் விலைபகரும் ஆய்தொடியும் = நல்லவர்க்கு 

  வைத்த அறப்புறம் கொன்றானும் இம்மூவர்

  கைத்துண்ணார் கற்றறிந்தார்

        

0 மறுமொழிகள்: