Wednesday, July 2, 2008

உணர்வீர் நீரே

ஏழைகட்கு கல்வி கற்க உதவுதற்காய்
எடுக்கின்றார் விழா ஒன்று ஊரில் உள்ளோர்
ஏழை வீட்டுக் குழந்தைகளைக் கொண்டு வந்து
ஏற்றுகின்றார் மேடையிலே உதவி செய்ய
கோழைகளாய் அவர் பெற்றோர் குழந்தைகளின்
கூட வந்து நிற்கின்றார் வறுமையாலே
ஏழைகட்கு உதவுவதை புகைப் படமாய்
எடுத்ததனைச் செய்தியென ஆக்குகின்றார்


குழந்தைகளைக் கொண்டு வந்து ஏழையெனக்
கூட்டத்தில் காட்டி மனம் கொல்லுகின்றார்
இழப்பதுவோ அவர் மானம் கொடுப்பவரும்
இழக்கின்றார் தன் மானம் ஆமாம் ஆமாம்
கொடுப்பதனை ஊருக்குச் சொல்லுவதும்
குழந்தைகளை ஏழையெனக் கொல்லுவதும்
சிறப்புடைத்தோ இல்லை இவர் செய்கை இது
சிறுமையினைக் காட்டுவதே உணர்க நீரே

0 மறுமொழிகள்: