Saturday, July 26, 2008

பழம் பாடல் பெரிய புராணம்

 நீலகண்டர் மனைவி சொன்ன வார்த்தையொன்றில்
  நிற்கின்றார் மனைவியவர் துணையுடனே
  காலமது இறைவர் அவர் காமனையே
  கண்ணுதலால் எரித்தவரின் வேலையது
  ஆலமுண்டார் அவர் அன்புத் தண்டனையில்
  அகப்பட்டார் நீலகண்டர் அதனால் அந்த
  சீலமுள்ளார் எமைத் தீண்ட வேண்டாம் என்று
  செப்பியதில் தப்புணர்ந்து நிற்கின்றாரே

  இருவருமே ஒரு வீட்டில் இருக்கின்றாராம்
  இருந்தாலும் உடல் சார்ந்த வாழ்க்கையில்லை
  திரு மகளோ துணைவருக்காய்எல்லாம் அங்கு
  தினப்படியே செய்கின்றார் குறைகளின்றி
  வருபவர்க்கும் போவபர்க்கும் விருந்து ஒம்பி
  வாழ்க்கையதன் சிறப்பையெல்லாம் போற்றுகின்றாராம்
  ஒருவருக்கும் தெரியாமல் இந்த வாழ்வை 
  உவப்புடனே கொண்டாராம் இறையை ஏத்தி

  சேக்கிழார்
  கற்புறு மனைவியாரும் கணவருக்கான எல்லாம்
  பொற்புறு மெய்யுறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய
  இற்புறத்தெழுந்திடாமல் இருவரும் வேறு வைகி
  அற்புறு புணர்ச்சியின்மை அயலறியார்து வாழ்ந்தார்
   

1 மறுமொழிகள்:

said...

உங்களின் பதிவுகளனைத்தும் அருமை.

உங்களின் முகவரியை எனது வலைத்தளத்தில் இணைத்துள்ளேன்.

எனது வலைத்தளத்திற்கு வருகை தரவும்.

http://eerththathil.blogspot.com

நட்புடன்,
நிலவன்.