Friday, July 11, 2008

பழம் பாடல் அவ்வையார்

   தாமரை மலர்ந்திருக்கத் தண்ணீர் நிறைந்திருக்கும்

           சீர் மிகுந்த நீர் நிலையில்  அன்னம் வந்து சேர்ந்து கொள்ளும்

   காமமது கல்வியின் மேல் கொண்டார் இணைவது போல்

        கற்றறிந்தார் கற்றறிந்தார் தம்மோடி ணைந்திடுவார்

  தாமறிவை விரும்பாமல் தற்குறியாய் வாழ்வார்கள்

       தற்குறிகள் கூட்டத்தில் தாமாய் இணைந்திடுவார்

  காகமது  பிணம் விரும்பி  காடுகளில் அலைதற் போல்

      கற்பில்லா மூடர்களும் மூடர்களோ டிணைவாரே

                                       மூதுரை

                நற்றாமரைக் கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற் போல் 

               கற்றாரைக் கற்றாரே காமுறுவர்  -  கற்பிலா

               மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முது காட்டில்

              காக்கை உகக்கும் பிணம்                                                  

      

0 மறுமொழிகள்: