Saturday, July 12, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

     உண்டு விட்டாள் கண்களினால் என் உயிரை இதழமுதம்

                தந்தேனும் காத்தாளா தளிர்க் கொடியாள்  இல்லை இல்லை

    கொண்டேன் நான் நோய் அந்த்க் கோல விழிப் பார்வையினால்

                 கொண்ட   நோய் தீர்த்து விடக் கூடிய  ஒர்   மருந்தில்லை

   கண்டு  நின்றார் அனைவருமே கணக்கொன்று சொன்னார்கள்

                 கண்மணியாள் பார்வையொன்றே அதைத் தீர்க்கும்  மருந்தென்று

  நோய்  தரும்   பார்வையாய் ஒரு பார்வை வைத்துள்ளாள்

                நோய் தீர்க்கும் பார்வையும்  அவளே தான் கொண்டுள்ளாள்

                                             குறள்

  இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ,,ஒரு நோக்கு

  நோய் நோக்கு ,மற்று அந்நோய் மருந்து

0 மறுமொழிகள்: