Tuesday, July 8, 2008

முனிரெத்தினத்தின் கல்வி நிலையங்கள்

அன்புடையீர்.
வணக்கங்கள்.முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் அருமை நண்பர் திரு முனிரத்தினம்
அவர்களின் கல்வி நிறுவனங்களின் புது மாணவர்களை வரவேற்கும் விழாவில் தலைமை
விருந்தினராகக் கலந்து கொள்ளச் சென்றிருந்தேன்.ஆர்.எம்.டி. ஆர்.எம்.கே.பொறியியற் கல்லூரி
கள்.துர்கா தேவி பாலி டெக்னிக் கல்லூரி சிறு குழந்தைகளுக்கு உறைவிடப்பள்ளி என்று 500
ஏக்கரில் அந்தக் கல்வி நிறுவனங்கள பரந்து விரிந்து இருப்பதனைப் போலவே அதனை நிர்வகிக்
கின்ற முனிரத்தினத்தின் மனைவியும் மகனும் மாமனார் அவர்களும் பரந்த உள்ளத்தினராகவே
உள்ளனர்.சுத்தம் சுத்தம் கல்லூரிகள் அத்தனை சுத்தம்.மாணவர்களைப் பார்க்கச் செல்கின்ற பெற்
றோர் நண்பர்கள் யாரெனினும் அங்கே உணவருந்தாமல் வர முடியாது.நல்ல அருமையான உணவு
அத்தனை கல்லூரிகளும் ஒரே வளாகத்தினுள் இருந்தாலும் ஒவ்வொன்றிற்கும் தனித் தனி விளை
யாட்டு அரங்குகள்.குளிருட்டப்பட்ட உடற் பயிற்சிக் கருவிக் கூடங்கள்.150க்கும் மேற்பட்ட
பேருந்துகள்.ஒட்டுநர்களிலிருந்து அனைவருக்கும் மிக மிகச் சுத்தமான உணவருந்தும் இடங்கள்.
அத்தனையும் சுத்தமான இடங்கள். ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்கு தனித் தனி முடி
திருத்தும் நிலையங்கள் குளிரூட்டப் பட்டவை.குழந்தைகளுக்கான உறைவிடப் பள்ளியின் சிறப்பை
வரிகளில் அடக்கி விட முடியாது.ஒழுக்கம் மாணவர்களுக்குச் சரியான முறையில் உணர்த்தப் பட்
டுள்ளது.எந்த மாணவரிடமும் கைத் தொலைபேசி கிடையாது.உடை என்ற பெயரில் கண்ணியக்
குறைவிற்கு அனுமதி இல்லை.மிக மிக என்னை வியப்பிலாழ்த்தியது முனிரத்தினம் அவர்களது
மொத்தக் குடும்பமும் காலை 8 மணிக்குக் கல்லூரிக்கு வந்தால் இரவு 8 மணிக்கே வீடு திரும்பு
கின்றனர்.கல்விக் கூடங்களைச் சுற்றி மரங்களும் செடிகளும்.நேபாளக் காவலாளிகள் 200க்கும்
மேற்பட்ட குடும்பத்தினர் அவர்களுக்கு அருமையான உறைவிடங்கள் தந்துள்ளார்கள்.

ஒரே செய்திதான் உங்களுக்குச் சொல்வேன்.நண்பர் முனிரெத்தினம் கல்லூரிகளில் படிக்கவும்
கொடுத்து வைத்திருக்க வேண்டும்.பணி புரியவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

அனைவருக்கும் அரசு குறித்துள்ள ஊதியம் சரியாகத் தருகின்றனர்.

கல்வி நிறுவனங்களை சிறப்பாக நடத்தி வரும் திரு முனிரெத்தினம் அவரது துணைவியார்
மஞ்சுளா அவர்கள் அவர்களது திருமகன் கிஷோர் பெரியவர் ஜோதி நாயுடு அவர்கள் அனை
வருக்கும் இறைவன் நீண்ட ஆயுளைத் தந்து இந்தச் சிறந்த கல்வித் தொண்டினைத் திறம்படத்
தொடர அருள் வேண்டும் என்று ஆண்டவனை வேடி நிற்கின்றேன்.

தங்கள் அன்பின் அடிமை
நெல்லைக்கண்ணன்

0 மறுமொழிகள்: