Wednesday, July 2, 2008

பழம் பாடல் கம்பன்

மதுவினால் மயக்கம் கொண்டாள்
மன்மதன் அம்பும் கொண்டாள்
இது விளை காலம் தன்னில்
இல்லையே கணவன் என்று
துகில் இடை மேலே நல்ல
தூமணி மேகலையை
அணிந்துளாள் தோழி தன்னை
அனுப்புவாள் தூது சொல்ல

உடன் அவன் இங்கே வேண்டும்
உண்மையை உணர்த்து நீயும்
திடமாகச் சென்று சொல்லி
திரும்ப நீ வருதல் வேண்டும்
மடந்தையே நீயும் எந்தன்
மனம் போல அங்கேயே போய்
இருந்திட வேண்டாம் என்றே
இயம்பியே நின்றாள் நங்கை

கம்பன்

கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி என்று அறியப் போக்கும் ஒர்
இனமணிக் கலையினாள் தோழி நீயும் என்
மனம் எனத் தாழ்தியோ? வருதியோ என்றாள்

0 மறுமொழிகள்: