Thursday, July 31, 2008

பழம் பாடல் திருமந்திரம்

 ஒன்றே ஒன்றாக அவனே யுள்ளான்
  உமையவளோடிணைந் தவனே இரண்டுமானான்
  கண்டார்கள் த்மக்கு அவனே குருவுமாகிக்
  கையெடுத்துத் தொழுவதற்கு லிங்கமாகி
  நன்றான சங்கமமாய்க் காட்சி தந்தான்
  சத்து சித்து ஆனந்தம் மூன்றும் ஆனான்
  நன்றான வேதங்கள் நான்கும் ஆனான்
  ந்லமாக அறம் பொருள் இன்பம் வீடும் ஆனான்

  கொன்றன்ன மனிதருக்குத் துன்பம் தரும்
  கூட்டான அய்ம்புலனை வென்றே நின்றான்
  நன்றான ஆதாரம் ஆறும் ஆனான்
  நாம் காண இயலாத ஏழண்டத்தும்
  சென்றானே நிலமாகி நீரும் ஆகி
  நீள் காற்றும் ஆகி தீ வானுமாகி
  கன்றாத கதிரவனாய்ச் சந்திரனாய்க்
  காணுகின்ற ஆன்மாவாய் எட்டாய் ஆனான்

  திருமந்திரம்
  ஒன்று அவன்தானே,இரண்டு அவன் இன்னருள்
  நின்றனன் மூன்றினுள் , நான்கு உணர்ந்தான் ஈந்து
  வென்றனன் , ஆறு விரிந்தனன், ஏழு உம்பர்ச் 
  சென்றனன் , தானிருந்தான் உணர்ந்து எட்டே
   
   
   

1 மறுமொழிகள்:

said...

ஆஹா!

அற்புதம்!

ஓம் சிவாய நம: