Friday, July 18, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

    ஏதேனும் ஒன்றைக்  கொள் எந்தன் நெஞ்சே

         எப்படி நான் இரண்டையுமே  தாங்கிக் கொள்வேன்

   சூதின்றி வாதின்றி இன்பம்  தன்னைச்

         சுகமதனைக் கொடுப்பதுவும் பெறுவதுவும்

  பேதை நான் மணத்தோடு பெறுவதற்கு

        பெரும் உதவி நாணத்தை விட்டு விடு

  வாதையின்றி  நான் வாழக் காமம் தன்னை

      வகையாக விட்டு  விடு  தாங்க மாட்டேன்

  இரண்டிலொன்றே என்னாலே தாங்க ஏலும்

        இதை உணர மாட்டாயா எந்தன் நெஞ்சே

  புரண்டு புரண்டழுதாலும் எந்தன் துன்பம்

        புரிந்து கொள்ள  மாட்டாயா   போதும் போதும்

  துறந்திடத்தான் நினைக்கின்றாள் நாணம் தன்னைத்

      தோள்களிலே சேர்ந்திடத்தான் துடிக்கும் பெண்ணாள

 இரந்து நிற்பாள் நாணத்தின் முன்னே     அதை

     எடுத்துரைத்துப் பெருமை சேர்த்தார்  வள்ளுவரும்

                                 குறள்

  காமம் விடு ஒன்றோ. நாண் விடு நன்னெஞ்சே

 யானோ பொறேன் இவ்விரண்டை

1 மறுமொழிகள்:

said...

குறல் தரும்
வரிகளில் நீங்கள் செதுக்கிய எழுத்துக்கள் வாசித்து மகிழ்ந்தேன்
வாழ்த்துக்கள்

அன்புடன்
ராகினி