Thursday, July 3, 2008

உயர்வு தரும்

குணம் கொண்ட பெரியோர்கள் பணத்தின் முன்னே
கும்பிட்டு நிற்பதில்லை அவர் அறிவார்
பிணமாக்கும் மனிதர்களை உயிரோடிங்கு
பேதைகளாய் ஆக்கி நிற்கும் பணமேயென்று
மணம் கொண்ட வாழ்க்கை கொண்டு மகிழுதற்கு
மனிதர்களாய் வாழ்வதற்கு அன்பு ஒன்றே
தினம் உங்கள் உள்ளிருந்து உதவி செய்யும்
தெய்வம் உமை அரவணைக்கும் உயர்வு தரும்

1 மறுமொழிகள்:

said...

நல்லதொரு கருத்தை நயம்பட உரைத்தீர் ஐயா!
இல்லாத நிம்மதியை இல்லாத பணம் கொண்டு
இல்லாது தொலைப்பதை விடுத்து உலகினில்
நல்லதொரு அன்பின் துணையால் அடைந்திடுவோமே!