Thursday, July 31, 2008

குறட் கருத்து பொருட் பால்

 ஊரோடு உலகெல்லாம் அஞ்சுகின்ற
  உயிர்க்கெல்லாம் கேடுகளே தந்து நின்ற
  சீரில்லா அறமற்ற செயல்களையே
  செய்வதற்கு நல்லவர்கள் நாணி நிற்பார்
  காரற்ற வானம் போல் கருணையில்லார்
  கவலையின்றி நாணம் விட்டு அதனைச் செய்வார்
  பார் போற்றும் அறமதுவோ நாணம் கொண்டு
  பாவியவன் தனை விட்டு விலகிச் செல்லும்
   
  குறள்
 பிறர் நாணத் தக்கது தான் நாணான் ஆயின்
 அறம் நாணத் தக்கதுடைத்து

0 மறுமொழிகள்: