Tuesday, July 22, 2008

பழம் பாடல் விவேக சிந்தாமணி

     கால் ஒன்று நொண்டி  கண் ஒன்றோ இல்லை

                 காதுகளும் அறுபட்டுப் போக

    வால் அதுவும்  ஊரார் தனை வணங்கி நின்றும்

                வடிவாக துண்டித்து விட்டார்

   பால் பானை உடைந்து தலையோடு தொங்க

               பார்க்கின்றார் அதைக் கண்டு சிரிக்க

  ஏலாத போதும் பெண் நாயின் பெண்ணே

              இரைப்போடு செல்கிறதாம் ஆண் நாய்

  ஊராரே இதனை உமக்கேன் தான் சொன்னார்

             உள்ளதனை உள்ள படி சொல்வேன்

 யாரான போதும் இதுதானாம் நிலைமை

            எப்படியும் காமமது கொல்லும்

 கூராக அதனை ஆண் நாயின் மூலம்

           கூறி நின்றார் அக் காலப் புலவர்

 யாராரோ இதனை வென்றதாய்ச் சொல்லல்

          எப்படி என்றல் இதனுட் செய்தி

                                          செய்யுள்

   உணங்கி ஒரு கால் முடமாகி                                                                                                                       ஒருகண் இன்றிச் செவியிழந்து

  வணங்கு நெடு வால் அறுப்புண்டு                                                                                                               அகல் வாயோடு கழுத்தேந்தி

  சுணங்கன் முடுவல் பின் சென்றால்                                                                                                          யாரைக் காமன் துயர் செய்யான்

  

                

0 மறுமொழிகள்: