Monday, July 21, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

   நாசி உளைகிறது தும்மலுக்காய்

        நலம் கொண்டார்   நினைக்கின்றார்  என மகிழ்ந்தேன்

   ஆசை  ஒழிந்ததங்கு தும்மலில்லை

        அன்புடையார்  நினைத்தாற் போல் நிறுத்தினாரோ

  பாசம் நிறைந்தவளாய்த் துடிக்கின்றாளாம்

        பாவி மகன் பிரிவாலே பெரிய கண்ணாள

  நேசம் நிறைந்தவளின்  உணர்வதனை

      நெஞ்சுணரக் காட்டுகின்றார்   குறளின்   வேந்தர்

                                                குறள்

  நினைப்பவர்  போல்   நினையார்   கொல்  தும்மல்

 சினைப்பது   போன்று கெடும்

0 மறுமொழிகள்: