Thursday, July 10, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

காதலித்து விட்டேனாம் என்னை விட்டு
கண்ணாளர் பிரிந்தாராம் ஊரே கூடி
பேதலித்து விட்டேன் நான் என்று சொல்லி
பின்னாலும் முன்னாலும் பேசி நிற்பார்
ஆதரவே அவர் தூற்றல் அதனாலன்றோ
ஆருயிரும் அழியாமல் நிற்கின்றது
காதலினை அவர் பேசப் பேசப் பேச
கவலையின்றி வாழுகின்றேன் நல் வினையால்

குறள்

அலர் எழ ஆருயிர் நிற்கும்,அதனைப்
பலர் அறியார் பாக்கியத்தால்

0 மறுமொழிகள்: