Thursday, July 24, 2008

பழம் பாடல் புகழேந்தி

      புகழேந்தி பாட வந்தார் இரட்டைத் தாழ்ப்பாள்

             போட்டு நின்ற அரசியிடம் கோபம் தீர்க்க

    புகழேந்த விரும்புவார் பெண்கள் என்ற

             பொதுப் பொருளை கருப் பொருளாய்க் கொண்டவராய்

  இழையொன்றை இரண்டாக வகுந்தாற் போல்

            இடைகொண்ட எம்மரசி பெண்ணரசி 

 பிழை பொறுக்கும் பெருங்குடியாம் பாண்டியர் தம்

           பெருங்குடியில் பிறந்தவள் நீ மறந்தா போனாய்

 மழை மாதம் மூன்று முறை பெய்யும் நாட்டு

           மன்னவராம் சோழரிவர் செய்த பிழை

 பெரிதென்று கருதி நிற்றல் சரியாய் ஆமோ

         பெரிய மனம் கொண்டீரே மாற்றிக் கொள்ளும்

 விழைகின்ற அன்பாலே உந்தன் வாசல்

         வேண்டி இங்கு நிற்கின்றார் சோழ மன்னர்

 குழை கொண்ட  காது வரை விழிகள் கொண்ட

        கோல மயில் கதவினையே திறந்தருள்வாய்

 உளமறிந்து பாடி நின்றார் புகழேந்தியார்

        ஊரறியும் ஆனாலும் உண்மை ஒன்று

 களமறிய அவருக்குக் கிடைத்த வாய்ப்பு

       கண்மணியின் பாண்டி நாட்டுப் புலவர் அவர்

 நிலையறிந் தார் அதனாலே அந்தப் பெண்ணாள்

       நெஞ்சறிந்து பாடி விட்டார் வென்று விட்டார்

 தலை நிமிர்ந்த கூத்தரவர் இயல்பினாலே

      தளிர்க்   கொடியாள் இரு தாழ்ப்பாள் போட்டு விட்டாள்

                                            புகழேந்தி

  இழையொன்றிரண்டு வகிர் செய்த நுண்ணிடை ஏந்திய பொற்

 குழையொன்றிரண்டு  விழியணங்கே கொண்ட கோபம் தணி

 ம்ழையொன்றிரண்டு கைம்மானாபரணன் நின் வாயில் வந்தால்

 பிழையொன்றிரண்டு பொறாளோ பெருங்குடியிற் பிறந்தவளே

      

         

 

0 மறுமொழிகள்: