Tuesday, July 8, 2008

அந்தோ பாவம்

நாட்டினிலே நடக்கின்ற தவறனைத்தும்
நல்லவர்கள் காணுகின்றார் கண்ட போதும்
போர்க் குரலை எழுப்பாமல் வீட்டிற்குள்ளே
பொருமுகின்றார் இருமுகின்றார் புலம்புகின்றார்
ஆர்க்கு வந்த விதியென்று நல்லவர்கள்
அழுகின்றார் புலம்புகின்றார் புரியவில்லை
நீர்க் குமிழி வாழ்க்கையதை வாழ்வதற்காய்
நெஞ்சிழந்து நிற்கின்றார் அந்தோ பாவம்

1 மறுமொழிகள்:

said...

நெஞ்சிழந்து வாழ்வோரில்சிலர்
வெஞ்சினமே கொண்டெழுந்து
அஞ்சாமல் போரிடவே
நெஞ்சத்தில் நினைக்கின்றார்
பிஞ்சுமுகம் பார்த்ததுமே
துஞ்சியவர் குமைகின்றார்
தூக்கத்தில் புலம்புகின்றார்
என் செய்வோம் யாம்!