Sunday, July 13, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

         மெல்லத்தான  தழுவுகின்றான் பொன் மகளாள்

             மேனியெல்லாம் இதழ்க் கோலம் போடுகின்றான்

        சொல்லத்தான்  வார்த்தையின்றிப் பூ மனத்தாள்

            சுகம் கண்டு இதம் கண்டு சொக்குகின்றாள்

        அள்ளித் தான்   தருகின்றார் இருவருமே

            அவர்களுக்குள் தோல்வியில்லை  வெற்றி ஒன்றே

        கள்ளியின்   தோள்களிலே களி முடிந்து

             காதலனும் உறங்குகின்றான் சுகமோ சுகம்

       மெல்ல அவன் விழிக்கின்றான் மார்பகமாம்

             மெத்தையிலே வாய் புதைத்துச் சிரிக்கின்றானாம்

       கள்ளியவள் விழிக்கின்றாள்  சிரிப்பதனின்

             காரணத்தைப் புரியாமல் திகைக்கின்றாளாம்

      மெல்ல அவன்   சொல்லுகின்றான்  மேலுலகம்

        மேலேயாம் பெரியவர்கள்  சொல்லுகின்றார்

     கள்ளி  உந்தன் தோளில்  நான்      கொண்ட தூக்கம்

        கார் மாலின்  சொர்க்கத்தின் இனிதேயென்றான்

                                        குறள்

     தாம் வீழ்வார்     மென்  தோள் துயிலின்    இனிது கொல்

    தாமரைக் கண்ணான் உலகு

1 மறுமொழிகள்:

said...

சொல்லித்தான் புரிந்திடுமோ
மெல்லியலாள் மென்மார்புச் சுகம்தனை

மெல்லத்தான் வருடுகிறாள்
உள்ளத்தில் உள்ளதெல்லாம் முன்கொண்டுவந்து

வல்லிய மென்முலை
மேலுலகம் வாழ்கின்ற கள்ளழகன் மஞ்சத்திற்கும் மேலாம்

சொல்லுகிறேன் கேட்பாய்
மாலினும் மேலாம் மென்முலை கொண்டவளே