Friday, July 25, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

  சொன்ன நேரம்  வருவதில்லை வந்த  பின்போ

          சுகம் உடனே வேண்டும் என்று  அலைகின்றார் பார்

  சின்னவளா நான் அறிவேன் இவரை நன்கு

           சிரிப்பின்றி  முகம் மாற்றித் துன்பப் பட்டேன்

 என்னவரோ மிகப் பெரிய  கெட்டிக்காரர்

            என் ஊடல் தீர்ப்பதற்காய் தும்மல் ஒன்றை

தன்னறிவால் உண்டாக்கித் தும்மித் தீர்த்தார்

            தனை மறந்து நான் அவரை வாழ்த்தவென்று

                                           குறள்

   ஊடி   இருந்தே  மாத்தும்மினார்  யாம் தம்மை

   நீடு வாழ்கென்பாக்கு   அறிந்து

0 மறுமொழிகள்: