Tuesday, July 22, 2008

குறட் கருத்து காமத்துப் பால்

 

   இரந்து தான் நிற்கின்றேன் தினம் தினமும்

           இரு விழிகள் கேட்கிறதா எந்தன் பேச்சை

  வரந்தருக என்றெல்லாம் வாயிழந்தேன்

          வகை வைக்க மறுத்ததெந்தன் வேண்டுதலை

  நிரந்தரமாய் இவை தூங்க மறுத்ததென்றால்

         நெஞ்சத்தார் கனவினிலே வருவதெங்கே

  இறந்து பட மாட்டாமல் நானும் இங்கே

        இருப்பதனைச் சொல்லுதற்கு வழி தான் ஏது

                                  குறள்

  கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு

  உயல் உண்மை சாற்றுவேன் மன்

0 மறுமொழிகள்: