Thursday, June 26, 2008

உங்களுக்காய்

இரண்டாயிரம் தமிழர் உலகமெங்கும்
இருக்கின்றார் படிக்கின்றார் நன்றி சொல்வேன்
திரண்டார் எம் தமிழர்தம் அன்னை தமிழ்
தேடி வாழும் எனை நன்கு ஆதரிக்க
கரங் கொண்டும் சிரங் கொண்டும் வணங்குகின்றேன்
கவிதையிதால் அனைவரையும் வாழ்த்துகின்றேன்
உளங்கொண்ட பெருமனத்தீர் அன்பு கொண்டீர்
உங்களுக்காய்த் தொடர்ந்து நானும் எழுதிடுவேன்

0 மறுமொழிகள்: