Wednesday, June 25, 2008

பழம் பா ட ல் கம்பன்

யாழுக்கும் குழலுக்கும் இனிமை ஈந்த
இடையென்ற ஒன்று இல்லா எழிலாம் பெண்ணாள்
பேழையெனும் வாய் திறந்தால் மழலை அதும்
பேச்சல்ல இசையாக வழங்கும் மின்னாள்
வாள் போன்ற கருங்குவளைக் கண்கள் தம்மை
வாயருகே கொண்டு போன மதுவிற்குள்ளே
தான் கண்டு வண்டு எனத் துரத்தினாளாம்
தருகின்றான் கம்ப நாடன் தருவித்தேன் நான்

கம்பன்
யாழ்க்கும்,இன்குழற்கும்,இன்பம் அளித்தன் இவை ஆம் என்ன
கேட்கும் மென் மழலைச் சொல் ஒர் கிஞ்சுகம் கிடந்த வாயாள்
தாள் தரும் குவளை தோய்ந்த தண் நிறைச் சாடியுள்,தன்
வாள்-கணின் நிழலைக் கண்டாள் வண்டு என ஓச்சுகின்றாள்

0 மறுமொழிகள்: