Wednesday, June 25, 2008

வழி ஒன்றில்லை

நல்லாரை வணங்கி நிற்போம் சென்று கண்டு
நாள் தோறும் தொழுது நிற்போம் என்றும் எங்கும்
வல்லாராய் அவர் மட்டும் வாழ்வதற்கு
வழி செய்தார் ஆண்டவரும் பலரைக் காக்க
இல்லார்க்கு எல்லாமும் கிடைக்கச் செய்தல்
எளியோர்க்கு துணையாகி நன்மை செய்தல்
பல்லோர்க்கும் வழி காட்டல் பணிவு காட்டல்
பண்பெல்லாம் உயர்ந்தோங்க ஒளிர்ந்து நிற்றல்


அல்லார்கள் மிகப்பெரிய உயரங்களில்
அமர்ந்துள்ளார் தவறுகளைப் படிகளாக்கி
செல்வாரோ நல்லவர்கள் அவரிடத்தில்
சிரிப்புக் கிடமாகிக் கிடப்பார் முன்னர்
பல் துறையின் வித்தகர்கள் கூட இந்தப்
பழிப்புக்கு ஆளாகிப் போகினறாரே
அல்லாத வழிகளிலே செல்வார் எல்லாம்
அழிந்தொழி வார் அதை விட்டால் வழி ஒன்றில்லை

0 மறுமொழிகள்: