Friday, June 27, 2008

செத்ததங்கு

தவளை ஒன்று ஆனையொன்றைப் பார்த்ததங்கு
தன்னருகே நின்றிட்ட தவளையிடம்
இவனை விடப் பெரியவனாய் ஆகிடுவேன்
என்னாலே முடியும் என்று குதித்தங்கு
கவலை கொண்ட நண்பனுமே சொல்லியது
கடவுள் தந்த உருவம் இது மாறாதென்று
தவளையது கேட்காமல் முக்கி முக்கி
தடால் என்று உடல் கிழிந்து செத்ததங்கு

0 மறுமொழிகள்: