Friday, June 27, 2008

பழம் பாடல் கம்பன்

மதுவினால் மயங்குவார்கள் மயங்கிய கூட்டத்துள்ளே
மயங்கினாள் மங்கை நல்லாள் மதுவினை அருந்தும் முன்னே
இதம் தரும் கண்கள் ரெண்டும் கொலை செயும் வேலைப் போன்றாள்
இடையதன் பெருமை சொல்லும் இனிய நல் மார்பைக் கொண்டாள்
பதமாக நிலவின் ஒளியைப் பளிங்கினுள் மதுவென்றேந்தி
இதழதில் சேர்க்கப் போனாள் எல்லோரும் நகைத்து நிற்க
மதுவுள்ளே போகு முன்பே நாணத்தை உட் கொண்டாளாம்
மது உள்ளே போனால் நாணம் மறைந்திடும் கம்பன் சொன்னான்

கம்பன்

புறம் எலாம் நகை செய்து ஏசப் பொரு அரு மேனி வேறு ஒர்
மறம் உலாம் கொலை வேற் கண்ணாள் மணியின் வள்ளத்து.வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய நிறைநத்தது போன்று தோன்ற
நறவு என, அதனை, வாயின் வைத்தனள், நாண் உட் கொண்டாள்

0 மறுமொழிகள்: