Thursday, June 26, 2008

உண்மை

உண்மையே தெய்வம் என்று சொல்லித் தந்தார்
உண்மை ஒன்றே வாழ்க்கை நெறி என்று சொன்னார்
உண்மையைப் போற்றிப் போற்றிப் பாடி நின்றார்
உண்மைக்கென்று வாழ்ந்தவரைக் காட்டி நின்றார்
உண்மை உண்மை என்று எங்கும் ஒதி நின்றார்
உண்மையாகப் பேசுகின்றார் என்றிருந்தேன்
உண்மை என்றால் பேசுதற்கு என்று மட்டும்
உணர்த்தி நின்றார் உண்மையுடன் ஊமையானேன்

1 மறுமொழிகள்:

said...

தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை