Wednesday, June 11, 2008

குறட் கருத்து

             

            கல்விதான்  உயர்  செல்வம்  என்றுரைத்த  வள்ளுவனார்
                   கல்லார்கள்  கண்களினைப்  புண் என்றும் உண்ர்த்தியவர்
            எல்லோரும்  அவ்வழியில்  இனிதாய்  நடக்கையிலே
                   இதை  மாற்றி  ஒரு    குறளை  நகைப்பாக்கி  வைக்கின்றார்
            கல்லாதார்  தமைப்பற்றி  கருத்தொன்று  சொல்லுகின்றார்
                    நல்லார்  அவர்  மிகவும்  நல்லார்  என்றுரைக்கின்றார்
            எல்லோரும்   அவரிடத்தில்  என்னவென்று  கேட்டு  நின்றால்
                 சொல்லுகின்றார்  ஒரு  கருத்தை  அவரன்றி யார் சொல்வார்


            கல்லார்  மிகச் சிறந்தார் மிகச்  சிறந்தார்  என்றுரைக்க
                     கல்லார்க்கு  நல்ல  வழி  காட்டுகின்றார்  வள்ளுவரும்
            நல்லார்  நிறைந்திருக்கும்  நற் சபைக்குள்  சென்று விட்டால்
                     நாடு  நிறைக் கற்றவரின்  மேல் சபைக்குள் வந்து விட்டால்
            பொல்லாத  தன்  வாயைத் திறக்காமல்  மூடி விட்டால
                     போதும்  அவர்  போற்றுதற்கு     உரியவராய்ப்  பொலிந்திடுவார்
            சொல்லாமல்  சொல்லுகின்றார் வள்ளுவப்  பேராசானும்
                      சோதனையில்  அவர் வெல்ல  மாட்டார் என்றுறுதியுடன


                                                      திருக்குறள்

             கல்லாதவரும்  நனி  நல்லர்  கற்றார்  முன்
             சொல்லாது  இருக்கப் பெறின்

0 மறுமொழிகள்: