Friday, June 13, 2008

பழம் பாடல் புதுக்கவிதை

          ஆண்  யானை  பெண் யானை  நலங்கிள்ளியை

                      அண்டியவர்க்கு  அவன்  அளிக்கும்  பரிசேயாகும்

           தூண் போன்ற  பேருருவம்  மார் பகலம்

                       துடியிடையாள்  எனக்கான தூங்குமிடம்

         காண்பதிலும்  களிப்பதிலும்  வாழ்ந்திருந்தேன்

                       கட்டாயம்  கலந்திடுவான்  என்று எண்ணி

         நாண்  விட்டுப்  பெண்  நானும்  காத்திருக்க

                      நலங்கிள்ளி  செய்த செயல்  நியாயமில்லை

         எல்லோர்க்கும்  எல்லாமும்  தந்து  போற்றும்

                    ஏற்றங்கள்  கொண்டவன்தான் என்னிடத்தில்

         வல்லானாய்  மாறி  எந்தன்  சீலையினை

                    வன்முறையாய்ப்  பறித்து விட்டான் விடுவேனோ நான்

         பல் வேந்தர் நாடுகளைப்  பணிய  வைத்த

                     படைகளிடம்  இவன் செங்கோல்  ஒழுக்கம் தன்னை

        சொல்வேன் நான்  வரட்டும்  என்  நேர்  எதிரே

                    சோழனுக்காய்  வீதியினைப் பார்த்தே  நின்றாள்

                                                 முத்தொள்ளாயிரம்

                       தானை கொண்டோடுவ தாயின்தன் செங்கோன்மை

                       சேனையறியக்  கிளவேனோ  -   யானை

                       பிடி வீசும்  வண்தடக்கை  பெய் தண்தார்க்கிள்ளி

                      நெடு வீதி நேர்ப் பட்ட போது

0 மறுமொழிகள்: