Thursday, June 12, 2008

திருக்குறள் காமத்துப்பால்

                விரைவோடு  வேகமதும்  கொண்டவனாம்
                     வேல் விழியாள்  காதலனும் பெருமை சொன்னாள்
                திரை  போட்ட  உள் அறையில்  இருவருமே
                      தேடி  நின்றார்  கண்ட பின்னும்  கண்ட பின்னும்
                வரையற்ற  காதலுக்குள்  இருவருமே
                       வரம்பெற்ற வடிவத்தால்  திளைத்திருந்தார்
                கரையேற  வழியின்றிக் காதலனும்
                       கன்னியவள்  தோள்களிலே சாய்ந்திருந்தான்


                நிறைவேறாக்  காதலினைக்  கொண்டு விட்ட
                       நிம்மதியில்  பெண்ணவளும் கண் திறந்தாள்
                விரைவென்றால்  அவ்விரைவு  காதலனும்
                       வேல் விழியாள்  நெஞ்சதனைச் சென்றடைந்தானாம்
                 புரிகிறதா தமிழினத்தீர்  கனவின் போது
                       பொறுப்பாகத் தோளினிலே  சாய்ந்திருந்தான்
                 விரி கனவு  முடிந்தவுடன்  மிக  விரைந்து
                        வெள்ளை  மனப்  பந்தலுக்குள்  ஒளிந்திட்டானாம்


                                              திருக்குறள

                   துஞ்சுங்கால்  தோள்மேலராகி  விழிக்குங்கால்
                   நெஞ்சத்தராவர்  விரைந்து

0 மறுமொழிகள்: