Saturday, June 14, 2008

பழம்பாடல் புதுக்கவிதை

           கட்டித் தழுவி நின்றேன்  கரங்களுக்குள்  பூட்டி வைத்தேன்

                   எட்டாத   சுகமதிலே  இதழமுதம்  தந்து  கொண்டான்

           முட்டும்  சுகமதனை  முத்தமிழின்  பொதிகை மலைக்

                   கட்டுக் கொண்டேயிலங்கும்  கனி மார்பில்  பெற்று(உ)  வந்தேன்

           எட்டி  அவன்  தேடி  இரு  புறமும்  படுக்கையிலே

                   தட்டித் தடவி நின்றேன்  தமிழ் மாறன்  காணவில்லை

            கட்டுக் குலையாத  கன்னி  மட்டும்  தானிருந்தேன்

                    கனவில்  வந்த  பாண்டியனால் கனிந்து விட்ட கவிதை இது

                                            முத்தொள்ளாயிரம்

               களி யானைத் தென்னன்  கனவில்  வந்தென்னை

               அளியான்  அளிப்பானே போன்றான்  -  தெளியாதே

              செங்காந்தள்  மென் விரலால்  சேக்கை  தடவ வந்தேன்

              என் காண்பேன்  என்  அலால்  யான்

                    

                    

0 மறுமொழிகள்: