Monday, August 4, 2008

பழம் பாடல் நாலடியார்

சேர்ப்பான் சேர்ப்பான் பொருளை சேர்த்துக் கொண்டேயிருப்பான்
  சேர்த்த அப்பொருளை அவன் செலவழித்தும் இன்பமுறான்
  பார்த்து அதனை மிகவே நல்லோர்க்கும் துறவியர்க்கும்
  பரிவோடளித்து அவர் தம் வாழ்த்தினையும் பெற மாட்டான்
  சேர்த்த அப் பொருளோ அவன் கண்டு சிரித்து நிற்கும்
  செய்த நன்மை ஒன்றுமில்லாக் காரணத்தால் அருள் சிரிக்கும்
  வேர்த்து வேர்த்து அலைந்து தினமும் வேதனைகள் சேர்க்காமல்
  வேண்டு மட்டும் பிறர்க்குதவ விரும்பி நிற்றல் அருள் அளிக்கும்

  நாலடியார்
  துய்த்துக் கழியான் துறவோர்க் கொன்றீகலான்
  வைத்துக் கழியும் ம்டவோனை - வைத்த
  பொருளும் அவனை நகுமே. உலகத்து
  அருளும் அவனை நகும்

0 மறுமொழிகள்: