Monday, August 4, 2008

குறட் கருத்து

 சோம்பல் கொண்டு அதனைச் சுகமென்று வாழ்வாரை
  சொர்க்கம் அதே என்று சொக்கி அதில் வீழ்ந்து உழல்வாரை
  தாம் வாழும் வாழ்க்கை தரம் அதனை உணராரை
  தருவதற்குக் காத்திருக்கும் நிலமகளை அணுகாரை
  தேம்பி அழப் பிறந்தவரே இவர் என்று எண்ணி எண்ணி
  திருமகளாம் நில மகளாள் தினம் நகைத்து நிற்பாளாம்
  ஒம்புங்கள் உழைப்பதனை உழுது விதைத்து அறுத்திடுங்கள்
  உயிர் வாழ்க்கை அது என்ற உண்மையினை உணருங்கள்

  குறள்
  இலம் என்று அசை இ இருப்பாரைக் காணின்
  நிலம் என்னும் நல்லாள் நகும்

1 மறுமொழிகள்:

said...

உழைப்பின் மேன்மை உண்மையன்றோ!
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/