Tuesday, August 19, 2008

பழம் பாடல் அவ்வை

  அள்ளிக் கொடுத்தலிலே அளவற்ற இன்பம் கொள்வான்
  அவனுக்குப் பொன்னதுவும் துரும்பேதான் கொடை உணர்வால்
  துள்ளிப் படையெதிர்க்கும் வீரனுக்கு மரணமது
  துரும்பேதான் துரும்பேதான் துச்சமென நினைப்பானே
  கல்வி தனைக் கற்று கண்ணோட்டம் கொண்டோர்க்கு
  காமமதும் மங்கையரும் துரும்பில் துரும் பாகும்
  இல்லம் துறந்திருக்கும் ஏற்றமிகு துறவியர்க்கு
  ஏறு போல் ஆண்டிருக்கும் மன்னவரும் துரும்பேதான்

  செய்யுள்

  போந்த வுதாரனுக்குப் பொன் துரும்பு சூரனுக்குச்
  சேர்ந்த மரணஞ் சிறு துரும்பு - ஆய்ந்த
  அறிவோர்க்கு நாரி யருந் துரும்பா மில்லத்
  துறவோர்க்கு வேந்தன் துரும்பு