Wednesday, August 13, 2008

பழம் பாடல் புறநானூறு

 ஆய் அண்டிரன் போலே ஆனைகளை
  அளிப்பதற்கு யார் உண்டு மன்னர் இங்கே
  போய் நிற்கும் புலவரெல்லாம் ஆனையின்றிப்
  போவதில்லை மீண்டும் தன் வீட்டிற்கங்கு
  வாய் திறந்து பாராட்டும் புலவரிங்கே
  வளமான செய்தி ஒன்றைச் சொல்லுகின்றார்
  ஆய் அவன் தன் நாட்டுக் காடு கூட
  அவன் தன்னைப் போற்றிப் பாடியதால்

  காடு நிறை ஆனைகளைப் பெற்றதுவாம்
  கனித் தமிழில் புலவரது கற்பனைகள்
  ஆடு ஆடு என்கின்றது நம் மனத்தை
  அழகு தமிழ் அன்னையவள் அருட் கொடைகள்
  கூடி நன்கு மகிழ்ந்திடுக தமிழர்களே
  கொடுப்பதிலே தமிழே தான் முதன்மையிங்கு
  தேடி கன்னற் தமிழ் சுவைப்பீர் என்றும் எங்கும்
  தெய்வ மொழி இதுவென்றான் பாரதியும்

  புற நானூறு
  ஏணிச்சேரி முட மோசியார்

  மழைக்கணம் சேக்கும் மாமலைக் கிழவோன்
  வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன்
  குன்றம் பாடின கொல்லோ
  களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே
  

0 மறுமொழிகள்: