Monday, August 18, 2008

குறட் கருத்து நட்பு

 தவறான வழிகளிலே சென்றழிந்து
  தடுமாறி வீழ்வாரைத் தான் தடுத்து
  அவமான உண்மை நிலை எடுத் துரைத்து
  அறமான நல்வழியில் அழைத்துச் சென்று
  நலமாக வாழ்கையிலே துன்பம் வந்தால்
  நண்பருடன் அத்துன்பம் பகிர்ந்து கொள்ளல்
  குலமான நண்பர்களின் குணமேயாகும்
  கொண்ட அந்த நட்பேதான் உண்மையாகும்

  குறள்

  அழிவின் அவைநீக்கி ஆறு உய்த்து அழிவின்கண்
  அல்லல் உழப்பதாம் நட்பு
  

0 மறுமொழிகள்: