Saturday, August 30, 2008

எனையறியார்

 இசையாலே வென்று நின்ற ஒருவன் தன்னை
  எப்படியோ வீழ்த்தி விட எண்ணம் கொண்டோர்
  பசையற்ற மனத்தாராய் மேடை தோறும்
  பசப்புக்கள் பம்மாத்துச் செய்த நேரம்
  கசையடியால் மேடைகளில் அவர்கள் தம்மை
  கலங்க வைத்த கண்ணனிவன் ஊர் அறியும்
  திசை தோறும்திசை தோறும் அவர்கள் தம்மை
  திணற வைத்தான் கண்ணன் இவன் உணர்ந்தார் உண்டு


  வேண்டும் என்றே குறை கூறும் எண்ணம் கொண்டார்
  விபரங்கள் கேட்காமல் பேசி நின்றால்
  நான் என்ன செய்து விட இயலும் இந்த
  நாடெங்கும் இசை ஞானி தனக்காய்ச் செய்த
  போர் அறியார் பேசுகின்றார் அறியாராகிப்
  பொறுப்பின்றி சாதி கூறித் திட்டுகின்றார்
  ஊர் அறியும் தமிழர்களூம் நன்கறிவார்
  ஒரு போதும் நான் கொள்ளேன் சாதி என்று

  கக்கன் என்ற பேராரை இந்த நாட்டின்
  கண்மணியாய் வாழ்ந்தாரை அன்றும் இன்றும்
  தக்க விதம் மேடைகளில் அவர் தம் நேர்மைச்  
  சரித்திரத்தைச் சொல்வானை கண்ணன் தன்னை
  மக்களூக்குள் இருக்கின்ற சாதியெனும்
  மடமையினை எதிர்த்து நிற்கும் வீரன் தன்னை
  எக்கணமும் குறைத்து விட எண்ணம்கொண்டார்
  எனையறியார் தமிழகத்தார் நிலை அறியார்

  அம்பேத்கர் என்ற ஒரு நேர்மையாளர்
  அவனியெல்லாம் போற்றுகின்ற போர்க்குணத்தார்
  தம்போக்கில் அவர்க்கு ஒரு சிலையை வைத்தார்
  தாம்பிரபரணிக்கரையாம் நெல்லை தன்னில்
  தம் பிடித்து மாலை போட வேண்டும் நிலை
  தனைக்கண்டு ஒரிரவில் ஏணி செய்து
  அம்பேத்கர் சிலை தனிலே வைத்தேன் என் பேர்
  அங்கில்லை மரியாதை நிமித்தமாக

1 மறுமொழிகள்:

said...

Great!!!
Congratulations.