Friday, August 29, 2008

வாழ்த்துகின்றேன்

  தொடர்ந்து பல நிகழ்வு ஆதலினால் எழுதவில்லை
  துய்ய மன அன்பருக்கு எந்தன் நிலை சொல்லி நின்றேன்
  வடம் கொள் தேர் போல வலம் வரும் நம் தமிழன்னை
  வாய்ப்பளிக்க நாளை முதல் எழுதிடுவேன் மீண்டும் நான்
  திடம் கொண்ட நெஞ்சத்தீர் உம்மை வணங்குகின்றேன்
  தீந்தமிழாள் தன்னாலே உறவான பெரு மனத்தீர்
  புடம் போட்ட நற்றமிழை பாக்களிலே வழங்கிடுவேன்
  போற்றி நிற்பீர் போற்றி நிற்பீர் உம்மை நான் வாழ்த்துகின்றேன்

1 மறுமொழிகள்:

said...

அய்யா....இப்பதிவு குறித்து உங்கள் கருத்தை அறியவிரும்புகிறேன்....நன்றி

http://kadalaiyur.blogspot.com/2008/08/blog-post_24.html