Friday, August 22, 2008

குறட் கருத்து

 செல்வம் வருகையிலே சிரித்து மகிழ்ந்ததனை
  சேர்த்து வைப்போம் என்கின்ற சிந்தனையே இல்லாமல்
  வள்ளல் மனத்தோடு வாழ்ந்து பழகியவர்
  வந்த செல்வமதன் மீது பற்று வைக்கா நேர்மையவர்
  கள்ளத் துன்பமதைக் கணக்கெடுக்க மாட்டாரே
  கண் கலங்கி அழுதழுது காயப் பட மாட்டாரே
  உள்ளத்து உணர்ந்தார்க்கு செல்வமது ஒன்றுமில்லை
  உணர்ந்ததனால் துன்பமதும் ஒன்றுமில்லை அவர்களுக்கு

  குறள்

  அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
  ஒம்புதல் தேற்றாதவர்

0 மறுமொழிகள்: