Friday, August 15, 2008

நாம் நடப்போம்

 கோடிக் கணக்கான ஏழையர்கள் கொல்லுகின்ற வறுமையிலே துன்பம் காண
  கோடிகளில்ஆடுகின்றார் ஆட்சியாளர் கொண்ட அந்த ஆட்சியினைக் காத்துக் கொள்ள
 பேடிகளாய் மாறி விட்டார் தாயர் நாட்டின் பெருமையெல்லாம் அழித்தொழித்தார் அந்தோ அந்தோ
  பிறந்த இந்த விடுதலைக்காய் இறந்து பட்ட பெரியவரை நினைத்தாரா பேய் மனத்தார்
 கேடிகளும் கண்டு அஞ்சும் வாழ்க்கை கொண்டார் கிறு கிறுத்தோம் அருவறுத்தோம் இவரைக் கண்டு
  வாடி இவர் நாணிடுவார் என்று எண்ண வகையில்லை குடும்பத்தோடு அசிங்கம் செய்வார்
 நாடிதனைக் காப்பாற்றி நலங்கள் பேணும் நல்லவரின் கையினிலே ஒப்படைப்போம்
  நம் தந்தை காந்தி தலைவர் காமராஜர் நலமான வழியினிலே நாம் நடப்போம்

0 மறுமொழிகள்: