Tuesday, August 5, 2008

தாய் தந்தை போற்றி நில்லும்

துறக்காத துறவியரை நம்பி இன்னும்
  தொடர்வாரைக் காண்கையிலே துன்பம் கொண்டேன்
  அற நிலைகள் தனை மறந்து வணிகம் ஆக்கி
  ஆடுகின்றார் விளம்பரங்கள் போடுகின்றார் 
  சிறப்பாக நமக்கு வழி காட்டுதற்காய்
  சேர்க்கின்றார் கூட்டங்கள் அதற்கும் கூட
  திரைப் படத்தார் துணையைத் தான் தேடுகின்றார்
  தெய்வமதை விளையாட்டாய்க் காணுகின்றார்

  என்னிடத்தில் வாருங்கள் நிம்மதியை
  எப்போதும் பெறுவதற்கு வழிகள் சொல்வேன்
  தன்னிலையை உயர்த்துதற்கு மிகச் சிறந்த
  தனி வழிகள் நூறு உண்டு வருக என்பார்
  அன்னவர்க்கு நோய்கள் வர உடனடியாய்
  அங்குள்ள மருத்துவரைத் தேடிடுவார்
  சின்னவராய் நமை ஏய்க்கும் இவரை யெல்லாம்
  சீண்டாதீர் தாய் தந்தை போற்றி நில்லும்
   

1 மறுமொழிகள்:

said...

நாட்டு நடப்பை சரியாகச் சொல்லியுள்ளீர்கள்



கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/