Tuesday, August 19, 2008

குறட் கருத்து

 ஏதேனும் ஒரு செய்தி இவரிடத்தில் கிடைத்திட்டால்
  எல்லோர்க்கும் அதைச் சொல்லி இன்பமதை அடைவார்கள்
  சூதாக வாழ்வார்கள் நல்லவர்கள் வாழ்வதனை
  சுகமதனைப் பார்த்தாலோ அவர் குறித்து இகழ்வார்கள்
  தோதாக பார்ப்பதற்கு மனிதரைப் போல் இருப்பார்கள்
  தொழில் எங்கும் நடிப்பதுவே அச்சம் இவர் குலச்சொத்து
  வேதனைகள் வரும் போது தங்களையே விற்றிடுவார்
  வெட்கம் மானம் சூடு இவர் விட்டு விட்ட நற் குணங்கள்

  குறள்
 அறை பறைஅன்னர் கயவர்தாம் கேட்ட
 மறைபிறர்க்கு உய்த்து உரைகாலான்

 உடுப்பதுவும் உண்பதுவும் காணின் பிறர்மேல்
 வடுக்காண வற்றாகும் கீழ்

 மக்களே போல்வர்கயவர்; அவர் அன்ன
 ஒப்பாரில் யாம் கண்டது இல்

 அச்சமே கீழ்களது ஆசாரம்;எச்சம்
 அவாஉண்டேல் உண்டாம் சிறிது

 எற்றிற்கு உரியார் கயவரொன்று உற்றக்கல்
 விற்றற்கு உரியர் விரைந்து

0 மறுமொழிகள்: