Saturday, August 16, 2008

கெட்டு விடும அவ்வை பழம் பாடல்

 எதுவெல்லாம் கெட்டு விடும் என்று ஒரு
  எளிதான பட்டியலை நமக்கு அன்று  
  முது பெரிய தமிழ்க்கிழவி அவ்வை தந்தாள் 
  முறையாக நாம் அறிவோம் அதனை நன்கு
  விதி வழியாய் நாட்டை ஆளும் மன்னவனும் 
  வீணான கொடுமை மிக்க வழியி லெல்லாம்
  சதி புரிந்து வரி விதித்து மக்களையே
  சங்கடத்தில் ஆழ்த்தி நின்றால் அவன் கெடுவான்

  உதவி என்று கையேந்தி வந்து நிற்பான்
  உதவி பெற்ற பின்னாலே அதனை நன்றாய்
  மனதில் கொண்டு அதனாலே மகிழ்ச்சி கொண்டு
  மனம் நிறைந்து பாராட்டவில்லை என்றால்
  இது என்ன உதவி பெரும் உதவி என்று
  ஏகடியம் பேசி நின்று குறைகள் சொன்னால்
  அதனாலே அவன் கெடுவான் மேலும் யாரும்
  அவனுக்கு எதுவும் செய்ய அஞ்சிடுவார்

  குல மகளாய் கணவனுடன் வாழுகின்ற
  குயில் குரலார் மயில் அழகார் தங்கள் வாழ்வில்
  நிலை பெற்ற வாழ்வதனை ஊரார் போற்றும்
  நீடு புகழ் வாழ்வதனைப் பெறுவதற்கும்
  குலப் பெருமை போற்றுதற்கும் தங்கள் வாழ்வில்
  கூசி நிற்கும் நாணமதைப் போற்றாரென்றால்
  பலப் பலரும் அவர் தம்மைக் கண்டு தூற்ற
  பாழாகி அவர் வாழ்வு கெட்டு விடும்

  
  விலை மகளாய் தன் வாழ்வைக் கொண்டு வாழும்
  வீணை எனும் குரல் கொண்ட அழகு மாதர்
  தலை வாரிப் பூச் சூடித் தம்மை வந்து 
  தழுவுவார் தம்மிடத்தில் சுகங்கள் காட்டி
  கலை நெகிழ்த்தி அவர்க்கெல்லாச் சுகமும் தந்து
  கட்டிலிலே பாடங்கள் சொல்லாராகி
  அலை போல நாணமதைக் கொண்டு நின்றால்
  அவர் கெடுவார் வாழ்வின்றித் துன்பம் கொள்வார்


  செய்யுள்

  நிட்டூரமாக நிதி தேடும் மன்னவனும்
  இட்டதனை மெச்சா இரவலனும் - முட்டவே
  கூசி நிலை நில்லாக் குலக் கொடியும்
  கூசிய வேசியும் கெட்டு விடும்
   

0 மறுமொழிகள்: