Wednesday, August 6, 2008

பொழிவின் பொன் விழா

  பதின் மூன்று அகவையிலே மேடையேற
  பைந்தமிழாள் அருள் செய்தாள் தொடர்ந்துதவ
  கதி அவளே என்றவளின் கால்கள் பற்றிக்
  கண்ணன் நான் தொழுது நின்றேன் இன்று வரை
  மதியாகி அவளே தான் வெற்றியெல்லாம்
  மணமாகத் தந்து நின்றாள் அய்ம்பதாண்டு
  சரியாக நிறைகிறது இந்த ஆண்டு அதைச்
  சந்ததிகள் கொண்டாட விழைந்து நின்றார்

  தமிழ் மாந்தும் நெல்லை நகர் இளையவர்கள்
  தனியாக விழவிற்கு முயலுகின்றார்
  அமிழ்தாகத் தலைப்பளித்தார் பொழிவு காணும்
  அறிவான பொன் விழா என்றுரைத்து நின்றார்
  தமிழுக்காய் எடுக்கின்ற அவ்விழாவில்
  தாங்கள் ஏதும் பங்கேற்க முடியுமென்றால்
  விரைவாக உதவிடுக விழா அதனை
  வெற்றி பெறச் செய்திடுக வேண்டுகின்றேன்

1 மறுமொழிகள்:

said...

பல்லாண்டு நீர்வாழப் பண்பார்ந்த பைந்தமிழின்
சொல்லாண்டுப் பாடுகிறேன் தூயவரே! -இல்லாண்டு
செய்யும் தொழிலாண்டு சேரும் புகழாண்டு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!

அகரம்.அமுதா