Wednesday, August 20, 2008

குறட் கருத்து

நல்லவரைப் பெரியாரைத் துணையாய்க் கொண்டு
  நடப்பவர்க்குத் துன்பங்கள் வந்த போதும்
  வல்லவராய் அதை மாற்ற வழிகள் சொல்லி
  வகைப்படுத்தி தொகைப்படுத்தி வாழ வைப்பார்
  அல்லவராய் அவர் தம்மை விட்டு விட்டால்
  ஆயிரம் பேர் பகையை விடத் தீமை அது
  நல்லவரைப் பெரியவரைத் துணையாய்க் கொள்ளல்
  நலம் பயக்கும் வலிமை தரும் உணர்வீர் நன்கு

  குறள்

  உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
  பெற்றியார்ப் பேணிக் கொளல்

  பல்லார் பகை கொளலின் பத்தடுத்த தீமைத்தே
  நல்லார் தொடர் கை விடல்

  தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
  வன்மையுளெல்லாம் தலை

0 மறுமொழிகள்: